சேலம், மே 22: சேலம் கருப்பூரில் உள்ள இஸ்கான் கோயில் வளாத்தில் நரசிம்ம சதுர்தசி விழா கொண்டாடப்பட்டது. சேலம், கருப்பூரில் உள்ள இஸ்கான் கோயில் வளாகத்தில், கடந்த 18ம் தேதி, நரசிம்மரின் அவதார தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு பஜனை, அபிஷேகம், நரசிம்மர் உபன்யாசம் நாடகம் முதலானவற்றை கண்டும், கேட்டும் ரசித்தனர். அதனைத்தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.