மாநில வில்வித்தை போட்டியில் இடைப்பாடி மாணவர்கள் வெற்றி

இடைப்பாடி, மே 22: மாநில அளவிலான வில்வித்தை போட்டியில், இடைப்பாடி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.  சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடந்தது. இதில், சேலம் மாவட்ட விளையாட்டு சங்கத்தின் சார்பில், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 400 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 8, 10, 12, 14 ஆகிய வயதிற்குட்பட்ட பிரிவில் போட்டி நடந்தது. இதில், இடைப்பாடியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளான அனுஷா, அகல்யா, கிரன்ராஜ், கிஷோர், வசந்த், லக்கிதாபதி, பாக்கிய, ஐஸ்வந்த், ஜெயப்பிரகாஷ், முகேஷ், அலிஷ்ரெனியா, பிரவீன், ஆத்திஷ் ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். 2ம் பரிசாக ஜவகர், பாலா, சினனேசன், கோபிநாத், ராகவ், விஜய்ஆனந்த், ஆகியோர் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: