×

கஞ்சா விற்றவர் கைது

ஈரோடு, மே 22: நசியனூர் மேற்குபுதூர் காலனி அருகில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் சித்தோடு போலீசார் சம்பவ இடத்தில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மர்மநபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் நசியனூர் பள்ளத்தூர் முதல்வீதியை சேர்ந்த முருகன்(42) என்பதும், அவர்கஞ்சா பொட்டலத்தை விற்பனைக்காக மறைத்து வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து முருகனை சித்தோடு போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.

Tags : Cannara ,soldier ,
× RELATED ராணுவ வீரர் மாயம்