கொடுமுடி, மே 22: கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி சாமி தரிசனம் செய்தார். ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் கோயிலுக்கு நேற்று முன்தினம் மாலை புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி வந்தார். அங்கு மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள், பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளை தரிசனம் செய்தார். முன்னதாக, கோயிலுக்கு திடீரென வந்த அவருக்கு கோயில் அர்ச்சகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.