×

தேசிய நெடுஞ்சாலையில் கார்-சரக்கு வேன் நேருக்குநேர் மோதல் 2 சிறுவர்கள் உட்பட 14 பேர் காயம்

சாத்தூர், மே 22: சாத்தூர் அருகே மதுரையில் மருத்துவமனையில் உள்ள உறவினரை பார்க்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட 10 பேர் மற்றும் வேனில் வந்த 4 பேர் படுகாயமடைந்தனர். திருவேங்கடத்தை சேர்ந்தவர்கள் ஒரு காரில் மதுரையில் மருத்துவமனையில் உள்ள உறவினரை பார்க்க காரில் வந்துகொண்டிருந்தனர்.

கார் சாத்தூர்-கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் வந்துகொண்டிருந்தபோது, சாத்தூர் அருகே பெத்துரெட்டிபட்டி விலக்கு அருகில் மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு வங்கியில் பணம் எடுக்க சென்ற வேன் சாலை நடுவின் தடுப்பு சுவற்றி மோதி டயர் வெடித்து நிலை தடுமாறி எதிர்திசையில் வந்த காரின் மீது அதிவேகத்தில் மோதியது.

இந்த விபத்தில் காரை ஒட்டிவந்த சின்னகாலம்பட்டி திருவேங்கடத்தை சேர்ந்த பாலகுருசாமி மகன் மார்க்கண்ணு(25) காரில் வந்த திருவேங்கடத்தை சேர்ந்த ராமசாமி மகன் கனகராஜ்(39) அவருடைய மகன் ரித்திஹா(3) சுப்பாராஜ் மனைவி சங்ரேஸ்வரி(42) மகன் கிருத்திக்(10) கந்தசாமி மனைவி மங்கத்தாய்(60) விஜயராகவன் மகன் சுரேந்திரன்(20) நிவேஷ்குமார்(16) தினகரன் மனைவி விஜயலட்சுமி(35) மகள் நேகா(10) ஆகிய 10 பேர்களும்,
வேனை ஒட்டிவந்த மதுரையை சேர்ந்த முகம்மது ராஜா மகன் சாகுல் ஹமீது(45) மதுரையை சேர்ந்த ராசு மகன் மாரியப்பன்(51) ஜெயபாண்டி மகன் சரண்ராஜ்(27) மற்றும் பந்தல்குடியை சேர்ந்த கருப்பையா மகன் ராஜபாண்டி(51) ஆகிய நான்கு பேர்களும் மொத்தம் 14 பேர்கள் பலத்த காயங்களுடன் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சாத்தூர் தாலுகா காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : children ,car-cargo van ,National Highway ,
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...