×

காரியாபட்டியில் டூவீலரில் மணல் திருடிய 5 பேர் கைது

காரியாபட்டி, மே 22: காரியாபட்டி அருகே குண்டாறு, தெற்காறு ஆகியவற்றில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் மணல் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். காரியாபட்டி அருகே குண்டாறு, தெற்காறு ஆகியவற்றில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனங்களில் மணல் திருடப்படுவதாக காரியாபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் மணல் திருடிய முத்துப்பாண்டி, கருப்புசாமி, வீரணன் உட்பட 5 பேரை கைது செய்ததோடு இருசக்கர வாகனங்களையும், சாக்கு மூட்டை களையும் பறிமுதல் செய்
தனர்.

Tags : Kariapatti ,
× RELATED 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி...