×

தேங்கி கிடக்கும் குப்பைகள் நாகலாபுரத்தில் நாற்றம் தாங்க முடியலீங்க... மக்கள் கதறல்

போடி, மே 22:  நாகலாபுரத்தில் குவிந்து கிடக்கின்ற குப்பைகளால் சுகாதாரக்கேடுகள் ஏற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். போடி அருகே போ.நாகலாபுரம் கிராம ஊராட்சி உள்ளது. இங்கு 7 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் குடியிருக்கின்றனர். பொதுமக்களிடம் சேகரமாகின்ற அனைத்து குப்பை கழிவுகளையும் தெருக்களில் ஆங்காங்கே வைத்திருக்கின்ற குப்பை தொட்டிகளில் போட்டு நிரப்புகின்றனர். அப்படி மொத்தம் சேருகின்ற குப்பைகளை கிராம ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் தள்ளுவண்டிகளில் சேகரித்து செல்கின்றனர்.

இந்நிலையில் கிராமம் முழுவதும் கடந்த சில வாரங்களாகவே குப்பைகளை சரிவர அள்ளுவதற்கு துப்புரவு பணியாளர்கள் வரவில்லை. இதனால் குப்பை தொட்டிகளில் நிரம்பி வழிந்து கிடக்கிறது. எனவே துர்நாற்றம் தாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். சுகாதாரகேடு அபாயம் நிலவுகிறது. எனவே போடி ஊராட்சி நிர்வாகம் வழிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை அள்ளி அப்புறப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Nagalapuram ,
× RELATED சாலையின் நடுவே இருந்த பேரிகார்டு மீது...