ரயில்வே ஊழியர் வீட்டில் திருட்டு

மணப்பாறை, மே 22:  மணப்பாறை ரயில் நிலைய குடியிருப்பில் வசித்து வருபவர் சின்னச்சாமி, இவரது மனைவி வளர்மதி (31), ரயில்வே ஊழியர். இவர் குடும்பத்தினருடன் வையம்பட்டி அருகேயுள்ள துலுக்கம்பட்டி பாம்பாலம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு, நேற்று வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் திருடப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து, வளர்மதி மணப்பாறை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: