×

சிங்கம்புணரியில் வீடுபுகுந்து வாலிபருக்கு கத்திக்குத்து

சிங்கம்புணரி மே 22: சிங்கம்புணரியில் முன் விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. சிங்கம்புணரி வடக்கு தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் ராசா(29). முழுவீரன் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து மகன் ராமன்(27). இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சேவுகப்பெருமாள் கோவில் அருகே இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராமன் ராஜாவின் வீட்டிற்கு சென்று கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த ராஜா சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜா கொடுத்த புகாரின் பேரில் சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்