×

திருவாரூர் மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது

திருவாரூர், மே 22: வாக்கு எண்ணிக்கையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை இயங்காது. திருவாரூர் கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மக்களவை தொகுதி தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் மதுபான கடைகள் நாளை இயங்காது. மேலும் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்களும் இயங்காது. இவ்வாறு திருவாரூர் கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags : shops ,Tasmanu ,Tiruvarur district ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி