×

போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

ஒரத்தநாடு, மே 22: ஒரத்தநாடு அடுத்த பாப்பாநாடு வெள்ளூர் புதுவளைவு கிராமத்தை சேர்ந்தவர் வீரையன் மகன் குபேந்திரன் (25). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். வேலையில் இருந்தபோதே, குபேந்திரன் இணையதளம் மூலம் மதுரையை சேர்ந்த ராமச்சந்திரன் மகள் நந்தினியை காதலிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் குபேந்திரன் நேற்று முன்தினம் நந்தினியை பாப்பாநாட்டுக்கு வரவழைத்தார். இதையடுத்து நந்தினியை அழைத்து கொண்டு பாப்பாநாடு இன்ஸ்பெக்டர் ஹேமலதாவிடம் சென்று, நாங்கள் இருவரும் காதலிக்கிறோம், தற்போது திருமணம் செய்து கொண்டோம் என்று குபேந்திரன் கூறினார். இதையடுத்து நந்தினியின் பெற்றோர் காவல் நிலையத்துக்கு  வந்தனர். அப்போது நான் குபேந்திரன் கூடதான் வாழ்வேன் என்று நந்தினி கூறினார். பின்னர் நந்தினி, குபேந்திரனுடன் சென்றார்.

Tags : police station ,
× RELATED கம்பம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்