திருவையாறு, மே 22: திருவையாறு தூய இதய அன்னை ஆலய தேர்பவனி நடந்தது. தஞ்சை மாவட்டம், திருவையாறு தூய இதய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைதொடர்ந்து ஆலயத்தில் திருப்பலி நடந்தது. தஞ்சை மறைமாவட்ட அருட்தந்தை ஞானபிரகாசம், பங்குதந்தை போனிபாஸ், உதவி பங்குதந்தை ஜேம்ஸ்ராஜா ஆகியோர் பங்கேற்று திருப்பலி நிறைவேற்றினர். பின்னர் தூய இதய அன்னையின் ஆடம்பர தேர்பவனியை துவக்கி வைத்தனர்.இந்த ஆலயத்தில் 7 தேர்பவனி நடந்தது. தேர்பவனியில் 7 ஊர் கிராம மக்கள் பங்கேற்றனர்.