×

சாலைப்பணியாளர்கள் மே 28ல் போராட்டம்

சிவகங்கை, மே 22: சிவகங்கையில் தமிழ்நாடு சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் மாரி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சின்னப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் சிவக்குமார், பிச்சை, சதுரகிரி, கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் சுரேஸ், மாவட்ட பொருளாளர் பாண்டி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இக்கூட்டத்தில் மாநில பொருளாளர் தமிழ் பேசியதாவது:சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக கருத வேண்டும். பணிநீக்க காலத்தில் உயிரிழந்த ஊழியர்கள் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் 622 கிமீ தூரச்சாலையை தனியார் பராமரிக்க ரூ.715 கோடி நிதி கொடுத்திருக்கின்றனர்.

தனியார்மயமாக்கல் கொள்கை காரணமாக சாலைபராமரிப்பு தரமற்று நடைபெறுகிறது. வேலைவாய்ப்பு பறிபோகிறது. சாலைப்பணியாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் குடும்பத்தோடு வருகிற 28ந்தேதி காத்திருக்கும் போராட்டம் நடத்த உள்ளோம். சென்னையில் நடைபெற உள்ள போராட்டத்தில் 10ஆயிரம் சாலைப் பணியாளர்கள் குடும்பங்கள் பங்கேற்கின்றனர்.

Tags : Roadmakers ,
× RELATED தேனி அருகே சாலைமறியலில்...