×

பைக் மீது பேருந்து மோதல் கதிர் அறுக்கும் இயந்திர டிரைவர் பலி

ஒரத்தநாடு, மே 22: ஒரத்தநாடு அருகே பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் கதிர் அறுக்கும்  இயந்திர டிரைவர் பலியானார். சேலம் மாவட்டம் ஆத்தூர் நஞ்சுழி பகுதியை சேர்ந்தவர் மாது. இவரது மகன் பிரதீப் (23). இவர் கதிர் அறுக்கும் இயந்திர டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை டூவீலாில் ஒரத்தநாடு அடுத்த செல்லம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக பிரதீப் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே பிரதீப் பலியானார். விபத்து நடந்தவுடன் டிரைவர் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : bus ram ,drunken machine driver ,
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா