தஞ்சையில் கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு மாணவர்களுக்கு சான்றிதழ்

தஞ்சை, மே 22: தஞ்சையில் நடந்த கோடைக்கால விளையாட்டு பயிற்சி நிறைவு முகாமில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தஞ்சை மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பில் 16 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 21 நாட்கள் கோடைகால பயிற்சி முகாம் நடந்தது. கடந்த 1ம் தேதி துவங்கி நேற்று (21ம் தேதி) வரை நடந்த இம்முகாம் தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 540 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்றனர்.  மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பாபு, மாவட்ட விளையாட்டு பயிற்றுனர்கள் கொண்டு தடகளம், வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, இறகுப்பந்து, மேசைப்பந்து, தற்காப்பு கலை ஆகிய விளையாட்டுகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. கோடைக்கால பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

Related Stories: