நரசிங்கன்பேட்டை மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

கும்பகோணம், மே 22: கும்பகோணம் அடுத்த நரசிங்கன்பேட்டை மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த 11ம் தேதி கொடியேற்றம் நடந்தது. கடந்த 17ம் தேதி மகா மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. 18ம் தேதி காத்தவராயன், ஆரியமாலா திருக்கல்யாணம், மாரியம்மன் வீதியுலா, 19ம் தேதி கழுமரம் ஏறுதல் நடந்தது. முக்கிய விழாவான நேற்று முன்தினம் இரவு தீமிதி திருவிழாவும், 21ம் தேதி விடையாற்றியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Related Stories: