×

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வாடிப்பட்டியில் விடிய, விடிய பூப்பல்லக்கு

வாடிப்பட்டி, மே 22:  வாடிப்பட்டி தர்மராஜன் கோட்டையில் பாலதண்டாயுதபாணி கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு விடிய விடிய பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. வாடிப்பட்டி அருகே, சிறுமலை அடிவாரத்தில் தர்மராஜன் கோட்டை உள்ளது. இங்குள்ள குன்றின் மீது பாலதண்டாயுதபாணி கோயில் உள்ளது. இக்கோயிலில் 99வது ஆண்டு வைகாசி விசாக திருவிழா, கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாலாபிஷேக திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. ஞாயிறு மாலை தர்மராஜன் கோட்டையில் உள்ள கோயில் இருந்து பட்டுப்பல்லக்கில் புறப்பட்ட பாலதண்டாயுதபாணி வாடிப்பட்டிக்கு வருகை தந்து, கள்ளர் மடத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு அங்கிருந்து புறப்பட்ட பாலதண்டாயுதபாணி வல்லபகணபதி கோயில் மண்டகப்படி சென்றடைந்தார். அங்கு பூப்பல்லக்கில் வண்ண மின்விளக்குகளில் எழுந்தருளினார்.

நள்ளிரவு 2 மணிக்கு வல்லபகணபதி கோயிலில் இருந்து புறப்பட்ட பூப்பல்லக்கு விடிய, விடிய வாடிப்பட்டி ஊர் முழுவதும் வலம் வந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். நேற்று காலை மீண்டும் பூப்பல்லக்கிலேயே தர்மராஜன் கோட்டையில் உள்ள கோயிலை சுவாமி சென்றடைந்தது. விழாவையொட்டி வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை  விழா கமிட்டியினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : Vaidi Pookkalai ,festival ,Vaisakh ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...