×

குடியிருப்பு பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின்வயர்கள்

மேலூர், மே 22: மேலூர் அருகே, தாழ்வாகச் செல்லும் மின்வயர்களால் கிராம மக்கள் விபத்து அச்சத்தில் உள்ளனர். மேலூர் அருகே, கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் சேக்கிபட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள ஆதிதிராவிடர் காலனியில் மின்வயர்கள் தாழ்வாகச் செல்கின்றன. இந்த வயர்கள் ஒன்றுக்கொன்று உரசுவதால் தீப்பொறி பறப்பதாக காலனி பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதனால், அச்சத்தில் உள்ளனர். சில இடங்களில் மின்வயர்கள் மீது பிளாஸ்டிக் பைப்புகளால் மூடியுள்ளனர். இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள், யூனியன் பிடிஓ ஆகியோரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்கின்றனர். இது தொடர்பாக முதல்வர் தனிப்பிரிவுக்கும் பொதுமக்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர். எனவே, சம்மந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் சேக்கிப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் குடியிருப்பு பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின்வயர்கள் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...