×

மதுரையில் மாயமானவர் எட்டு ஆண்டுகளுக்கு பின் 2வது மனைவியுடன் சிக்கினார்

மதுரை, மே 22: மதுரை மாவட்டம், ஆலாத்தூர் திருமால்புரத்தை சேர்ந்த மதுரைராஜன் (55). கடந்த 2011 ஜனவரியில் வீட்டை விட்டு மாயமானார். புகாரின்பேரில் ஊமச்சிகுளம் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வந்தனர். காணாமல் போன தனது தந்தையை கண்டுபிடித்து தர வேண்டும் என மதுரைராஜன் மகள் தனலட்சுமி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் வழக்கை விசாரித்து வந்தார். மேலும் மதுரைராஜனை சிபிசிஐடி எஸ்ஐ ராஜாங்கம், போலீசார் ரேமாண்ட், முத்தையா, ரவிசெல்வம், சீனிவாசன், ராமசந்திரன், நாகபாண்டி ஆகியோர் தேடி வந்தனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகா, கொன்றைக்குடி அருகே, காலகம் கிராமத்தில் ராஜலட்சுமி என்ற பெண்ணை, மதுரைராஜன் 2வது திருமணம் செய்து வாழ்க்கை நடத்தியது சிபிசிஐடி போலீசாருக்கு தெரிய வந்தது. அவரை அழைத்து வந்த சிபிசிஐடி போலீசார், மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Tags : Madurai ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...