×

ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் 25 ஆயிரம் மரக்கன்று நட திட்டம்

வத்தலக்குண்டு, மே 22: வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தில் 17 ஊராட்சிகளையும் பசுமை சோலையாக்கும் திட்டத்தில் இணைக்க கடந்த 2017ம் ஆண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டார். இதை பாராட்டி கடந்த குடியரசு தினத்தன்று மாவட்ட கலெக்டர் விஜயசந்திரிகாவுக்கு விருது வழங்கினார். தொடர்ந்து விஜயசந்திரிகா ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக பதவி உயர்வு பெற்று சென்றார்.

அங்கும் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தை பசுமை சோலையாக்கும் திட்டத்திற்கு விஜயசந்திரிகா வத்தலக்குண்டு பசுமை இயக்கத்திடம் 25 ஆயிரம் மரக்கன்றுகள் கேட்டிருந்தார். இவை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பசுமை வதிலை இயக்க தலைவர் மருதராஜ் தலைமை வகித்து மரக்கன்றுகளை வழங்கினார். ஆணையாளர் விஜயசந்திரிகா இவற்றை பெற்று கொண்டார். இதில் துணை தலைவர் தங்கராசு, சமூகஆர்வலர் சந்திரசேகரன் மற்றும் இயக்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்