×

காப்பாற்ற கோரிக்கை உலக அமைதி வேண்டி தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் கிமீ பயணம்

திண்டுக்கல், மே 22: உலக அமைதி வேண்டி திண்டுக்கல்லை சேர்ந்த சமையல் மாஸ்டர் தமிழகம் முழுவதும் தட்டு வண்டியில் 3 ஆயிரம் கிமீ பயணித்து விழிப்புணர்வு பயணம் சென்றார். திண்டுக்கல்லை சேர்ந்தவர் செல்வராஜ். சமையல் மாஸ்டரான இவர் உலக அமைதி வேண்டி தமிழகம் முழுவதும் தட்டு வண்டியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் 20 நாட்கள் தட்டு வண்டியில் சுமார் 3 ஆயிரம் கிமீ பயணித்து, 17 திருத்தலங்களுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் திண்டுக்கல் வந்தடைந்தார். இதுகுறித்து செல்வராஜ் கூறுகையில், ‘17வது ஆண்டாக உலக அமைதி வேண்டியும், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்’ என்றார்.

Tags : world ,whole ,Tamil Nadu ,
× RELATED தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம்