கொடைக்கானலில் மண்டை உடைப்பு அண்ணன், தம்பி கைது

கொடைக்கானல், மே 22: கொடைக்கானல் மேல்மலை கிராமம் கூக்கால், ஜவகர் தோட்டம் கணவன பாறையை சேர்ந்தவர் காளியப்பன். தோட்ட காவலாளி. இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த சகோதரர்களான கருப்பையா, முருகனுக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் காளியப்பன் காவல் பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கருப்பையா, முருகன் ஆகியோர் இவரை வழிமறித்து தகராறு செய்துள்ளனர்.

தொடர்ந்து இருவரும் சேர்ந்து கட்டையால் காளியப்பனை சரமாரியாக தாக்கினர். இதில் காளியப்பன் மண்டை உடைந்து சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கொடைக்கானல் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் தனிக்கொடி வழக்குப்பதிந்து கருப்பையா, முருகனை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories: