கொடைக்கானல், மே 22: கொடைக்கானல் மேல்மலை கிராமம் கூக்கால், ஜவகர் தோட்டம் கணவன பாறையை சேர்ந்தவர் காளியப்பன். தோட்ட காவலாளி. இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த சகோதரர்களான கருப்பையா, முருகனுக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் காளியப்பன் காவல் பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கருப்பையா, முருகன் ஆகியோர் இவரை வழிமறித்து தகராறு செய்துள்ளனர்.