×

காரைக்கால் சந்தை திடல் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்

காரைக்கால், மே 22:  காரைக்கால் சந்தை திடல் அருகே, நகராட்சிக்குட்பட்ட இடம் மற்றும் சாலை ஆக்கிரமிப்பை, நகராட்சி நேற்று அதிரடியாக அகற்றியது. காரைக்கால் நகர் பகுதியில் உள்ள அரசு இடம், சாலை மற்றும் நடைபாதைகளை பலர் ஆக்கிரமித்துள்ளதாக வந்த தொடர் புகாரையடுத்து, மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா உத்தரவின் பேரில், நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி வருகிறது. பலர் தாங்களாகவே முன்வந்து அகற்றி வருகின்றனர். இந்நிலையில், நகராட்சியின் எச்சரிக்கையை மீறி, காரைக்கால் சந்தை திடல் அருகே மணி என்பவர், நகராட்சிக்குட்பட்ட இடத்தையும், சாலையும் ஆக்கிரமித்து குஜிலிமணி என்ற பெயரில் பழைய இரும்புக் கடையை நடத்தி வந்தார். நேற்று நகராட்சி ஆணையர் சுபாஷ் தலைமையில், நகராட்சி அதிகாரிகள், நகர காவல் நிலைய போலீசார் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர்.  மேலும், நகராட்சிக்கு சொந்தமான இடத்தை யார் ஆக்கிரமித்திருந்தாலும், தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்பை அகற்றிவிட வேண்டும். இல்லையேல் எந்தவித அறிவிப்பும் செய்யாமல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். என ஆணையர் சுபாஷ் எச்சரிக்கை விடுத்தார்.

Tags : Karaikal Market Land ,
× RELATED பாலாலய நிகழ்ச்சியுடன் துவக்கம்...