சென்னை: எழும்பூர் காவலர் குடியிருப்பில் தூங்கிக் கொண்டிருந்த தலைமை காவலர் வீட்டில் 10 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் ராஜா (27). இவர், எழும்பூரில் உள்ள காவலர் குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 20ம் தேதி சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்ற ராஜா, அங்கிருந்து நேற்று அதிகாலை எழும்பூரில் உள்ள தனது குடியிருப்பிற்கு வந்துள்ளார். ஊரில் இருந்து வரும் போது பையில் தனது மனைவியின் நகைகள் 10 சவரனை எடுத்து வந்தார்.