×

தூத்துக்குடியில் தொழிலாளியை கொல்ல முயற்சி

தூத்துக்குடி, மே 22: தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சாந்தி. கடந்த சில நாட்களுக்கு முன்புகணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சாந்தி, தூத்துக்குடி பாத்திமாநகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.    இந்நிலையில் தனது மனைவியை வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக ராஜா பாத்திமாநகர் சென்றுள்ளார். அங்கு சாந்தி அவருடன் வர மறுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா, பாட்டிலில் மண்எண்ணெய் ஊற்றி அதில் தீ வைத்து கொளுத்தி, சாந்தி வீட்டுக்குள் வீசியுள்ளார். இதனை அறிந்த சாந்தியின் வீட்டுக்கு எதிர் வீட்டில் வசித்து வரும் தொழிலாளி ரோசையா(54) என்பவர் ராஜாவை கண்டித்துள்ளார்.இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ராஜா மற்றொரு பாட்டிலில் தீ வைத்து கொளுத்தி அதை ரோசையா மீது வீசி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ரோசையாவிற்கு தீ காயம் ஏற்பட்டு  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து  தென்பாகம் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி...