×

தொழிலாளி வீட்டுக்கு தீ வைப்பு

குலசேகரம், மே 22:  குலசேகரம்  அருகே கல்வெட்டான்குழி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(43). தொழிலாளி. இவருக்கும்,  ஆண்டி ஏலா பகுதியை சேர்ந்த ஜெகதீஷ்(27), ஷாஜின் ஆகியோருக்கும் இடையே  முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 17ம் தேதி  அவர்களுக்குள் மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம்  அடைந்த ஜெகதீஷ், ஷாஜின் இருவரும் மணிகண்டன் வீட்டை தீ வைத்து  எரித்துள்ளனர். இதுகுறித்து மணிகண்டன் குலசேகரம் போலீசில் புகார்  தெரிவித்தார். போலீசார் ஜெகதீஷ் மற்றும்  ஷாஜின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Fire worker ,
× RELATED தேனி கலெக்டர் ஆபீசில் முதியவர் தீக்குளிப்பு