×

ஜெகதளாவில் இருந்து ஊட்டிக்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை

குன்னூர், மே 21: ஜெகதளா பகுதியில் இருந்து ஊட்டிக்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.  குன்னூர் அருகேயுள்ள ஜெகதளா பகுதியினை சுற்றிலும் 10க்கும் மேற்பட்ட  கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து ஊட்டிக்கு ஏராளமான மக்கள்  அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பணிக்கு சென்று வருகின்றனர். இந்த  கிராமங்களுக்கு குன்னூரில் இருந்து மினி பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு  வருகிறது. ஊட்டிக்கு செல்ல பேருந்துகள் இல்லாததால் ஜெகதளா பகுதியில்  இருந்து அருவங்காடு பகுதிக்கு மினி பஸ்சிலும், அருவங்காடு பகுதியில்  இருந்து அரசு பஸ் மூலம் ஊட்டிக்கு செல்ல வேண்டியுள்ளது. அரசு பஸ் குன்னூர்  பகுதியில் இருந்து அதிக பயணிகளுடன் வருவதால், அருவங்காடு பகுதியில் பெண்கள்  மற்றும் ஆண்கள் படியில் பயணம் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.  மேலும்  வாடகை வாகனங்களுக்கு அதிக கட்டணம் செலுத்தி பயணிக்கும் நிலை உள்ளது.  இதனால் ஜெகதளா பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே  ஜெகதளா பகுதியில் இருந்து ஊட்டிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என  ஜெகதளா  பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Jagatla ,Ooty ,
× RELATED மழை பெய்யாத நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம்