×

சான்று பெற விண்ணப்பம்

சிவகங்கை, மே 21: முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு சார்ந்தோர் சான்று பெற விண்ணப்பிக்கலாம். சிவகங்கை முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குநர் வரதராஜன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: முன்னாள் படைவீரர் சிறார்களுக்கு பல்வேறு படிப்புகளில் தமிழ்நாடு அரசால் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு இட ஒதுக்கீட்டின் கீழ்  விண்ணப்பித்திட மாவட்ட முன்னாள் படைவீரர் அலுவலகத்தில் சார்ந்தோர் சான்று வழங்கப்பட்டு வருகிறது. இச்சான்றினை பெறுவதற்கு முன்னாள் படைவீரரின் அசல் படைவிலகு சான்று, இவ்வலுவலகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, சிறார்களின் பள்ளி மாற்று சான்று, மதிப்பெண் பட்டியல், சாதிச்சானறு, கல்வி நிலையத்தில் பெறப்பட்ட விண்ணப்பம் அல்லது இணையதளத்தில் விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்யப்பட்ட  விண்ணப்பம், படைப்பிரிவில் பெயர் பதிவு செய்யப்பட்ட பப்ளிகேஷன் ஆணை மற்றும் டி.எஸ்.சி படைப்பிரிவில் மறுவேலை வாய்ப்பு பெற்றுள்ள முன்னாள் படைவீரர்கள் இவ்வலுவலகத்தால் வழங்கப்பட்ட தங்களது அடையாள அட்டை ஆகியவற்றுடன் சார்ந்தோர் சான்று பெற விண்ணப்பிக்கலாம். சிறார்களுடன் சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு முந்தைய ஆண்டுகளில் வழங்கப்பட்ட சார்ந்தோர் சான்றிதழை பயன்படுத்தக் கூடாது. முந்தைய  ஆண்டுகளில் வழங்கப்பட்ட சான்றிதழை நடப்பு கல்வி ஆண்டிற்கான விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பும்  விண்ணப்பங்கள் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகத்தால் கூர்ந்தாய்வு செய்யப்படும் போது நிராகரிக்கப்படும்.

Tags :
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்