தாய் குக்கரால் தாக்கியதில் 5 வயது பள்ளி சிறுமி பலி

சேலம், மே 21: திருச்சியில் டிவி பார்த்துக்கொண்டிருந்த குழந்தையை குக்கரால் தாக்கிய தாய், வெயிலில் நிற்க வைத்து கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதில் அச்சிறுமி மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி பலியானார்.

நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு நேற்று பகல் 2 மணி அளவில் மயங்கிய நிலையில் லத்திகாஸ்ரீ(5) என்ற சிறுமியை சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். உடனடியாக டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிறுமிக்கு எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் ஆம்புலன்சில் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால், வழியிலயே அச்சிறுமி உயிரிழந்தார். அச்சிறுமியின் தந்தை பெயர் பாண்டியன். திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரைச்சேர்ந்தவர். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் வேலை செய்து வருகிறார். தாய் நித்ய கமலா. இவர், அரசு பள்ளி  ஆசிரியை. நேற்று காலை சிறுமி லத்திகாஸ்ரீ டிவி பார்த்து கொண்டிருந்தார். அப்போது, சரியாக படிக்கவில்லை என கூறி அவரது தாய், குக்கர் மூடியால் அடித்ததுடன், வெயிலிலும் நிற்க வைத்ததாக தெரிகிறது. இதில் குழந்தை மயங்கி விழுந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: