ஓமலூர், மே 21: ஓமலூர் வட்டார விவசாயிகள் இலை வாழை சாகுபடி செய்து லாபமடையலாம் என வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் மற்றும் கருப்பூர் வட்டார கிராமங்களில், அதிக அளவில் வாழை பயிரிட்டுள்ளனர். கடந்த 2 மாதங்களாக சூறைக்காற்று வீசுவதால் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. வாழை இலை மற்றும் வாழை நார் உற்பத்தி செய்து ஓரளவிற்கு நஷ்டத்தை ஈடுகட்டியுள்ளனர். தற்போது ஓமலூர் வட்டாரத்தில் இலை வாழை சாகுபடி செய்வது உகந்தது. காற்றுக்கு பயந்து வாழை சாகுபடி செய்ய அச்சப்படும் பெரிய விவசாயிகள், அதிக பராமரிப்பு செலவு, உரச்செலவு செய்யாமலே, நீர், மண் வசதி இருந்தால் வெகு வேகமாக வளரும் இலை வாழையை சாகுபடி செய்யலாம்.