வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 17 பவுன் கொள்ளை

காடையாம்பட்டி, மே 21: காடையாம்பட்டி அருகே கூகுட்டப்பட்டி ஊராட்சி மேல்தின்னப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி(90). ஓய்வு பெற்ற போலீஸ்காரரான இவரது மனைவி கோவிந்தம்மாள்(85). நேற்று முன்தினம், கோவிந்தம்மாள் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது சுமார் 35 வயது மதிக்கதக்க 2 பெண்கள் ஸ்கூட்டியில் வந்து அவரது வீட்டின் முன் நிறுத்தினர். பின்னர், அவரிடம் ₹500 கொடுத்து இருவரையும் ஆசிர்வாதம் செய்யுமாறு கூறி மூதாட்டியின் தலையில் ஏதோ ஒன்றை தடவினர். உடனே, கோவிந்தம்மாள் மயக்கமடைந்தார். பின்னர், உள்ளே சென்ற 2 பெண்களும், வீட்டில் இருந்த 17 பவுன் நகையை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் ெசன்றனர். மயக்கம் தெளிந்த மூதாட்டி, வீட்டினுள் சென்று பார்த்த போது, நகை கொள்ளை போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து, தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் கோவிந்தம்மாள் புகார் அளித்தார். அதன் ேபரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: