இடைப்பாடி, மே 21: இடைப்பாடி பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் தென்னை மரங்கள் காய்ந்து கருகிய நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் ேவதனை அடைந்துள்ளனர். இடைப்பாடி, ரெட்டிப்பட்டி, சாரனார்பட்டி, குரும்பட்டி, கோணசமுத்திரம், கொங்கணாபுரம், கச்சிப்பள்ளி, தாதாபுரம், இருப்பாலி, ஆடையூர், பக்கநாடு, மலங்காடு உள்ளிட்ட பகுதியில், சுமார் 20ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக பருமழை பொய்த்து ேபானதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் தென்னை மரங்கள் காய்ந்து கருகிய நிலையில் உள்ளது. இதனையடுத்து, சில விவசாயிகள் காய்ந்த தென்னை மரங்களை வெட்டி, குறைந்த விலைக்கு விற்பனைக்கு அனுப்பும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.