இடைப்பாடி அருகே தண்ணீரின்றி காய்ந்த தென்னை மரங்கள்

இடைப்பாடி,  மே 21:  இடைப்பாடி பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் தென்னை மரங்கள் காய்ந்து கருகிய நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் ேவதனை அடைந்துள்ளனர். இடைப்பாடி, ரெட்டிப்பட்டி, சாரனார்பட்டி, குரும்பட்டி, கோணசமுத்திரம், கொங்கணாபுரம், கச்சிப்பள்ளி, தாதாபுரம், இருப்பாலி, ஆடையூர், பக்கநாடு, மலங்காடு உள்ளிட்ட பகுதியில், சுமார் 20ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக பருமழை பொய்த்து ேபானதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் தென்னை மரங்கள் காய்ந்து கருகிய நிலையில் உள்ளது. இதனையடுத்து, சில விவசாயிகள் காய்ந்த தென்னை மரங்களை வெட்டி, குறைந்த விலைக்கு விற்பனைக்கு அனுப்பும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘3 ஆண்டுகளாக கிணற்றில் சுத்தமாக தண்ணீர் இல்லை. மழை பொழிவும் இல்லாததால், தென்னைக்கு கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. காலப்போக்கில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால், தென்னை மரங்கள் முற்றிலுமாக காய்ந்து விட்டன. கடந்த 15ஆண்டுகளாக வளர்த்த தென்னை மரங்கள், பலன் தரும் தருவாயில் காய்ந்து போனதால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ேவண்டும்,’ என்றனர்.

Related Stories: