×

மக்கள் பாதை சார்பில் தகவல் அறியும் உரிமைச்சட்ட

விழிப்புணர்வு கருத்தரங்கம்திருச்செங்கோடு, மே 21: நாமக்கல் மக்கள் பாதை அமைப்பின் எலச்சிபாளையம் ஒன்றியம் சார்பில், கிராமங்களை வலுப்படுத்த கிராம இளைஞர்கள் கிராம சபை மற்றும் கிராம நிர்வாகத்தில் பங்கேற்று மக்கள் முன்னேற்றத்தில் பங்கெடுக்கும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயிலரங்கம் மற்றும்  கலந்தாலோசனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஈரோடு சட்டப்பஞ்சாயத்து இயக்த்தைச் சேர்ந்த கண்ணையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விளக்கி கூறினார். மேலும், இளைஞர்கள் ஆண்டுக்கு 4 முறை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு கிராம நிர்வாகம், கிராமத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி, வரவு-செலவு, வளர்ச்சி திட்டங்கள் குறித்த தீர்மானங்களை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்து விளக்கி கூறினார்.

மேலும், சாலை வசதி மற்றும் குடிநீர், சாக்கடை வசதி போன்ற பொதுப்பணித்துறை சார்ந்த தகவல்களை பெறுவது எப்படி என்றும், கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி குறித்தும், நிதி முறைகேடு குறித்தும் தகவல்களை எவ்வாறு பெறுவது என்றும், அதுகுறித்த புகார்களை யாரிடம், எப்படி கொடுக்க வேண்டும் என்பதும் குறித்தும் விளக்கினார். மேலும், கூட்டத்தில் பங்குகொண்டவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார். நாமக்கல் மாவட்ட மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் கண்ணன் பங்கேற்று, மக்கள் பாதையின் ஊழல் எதிர்ப்பு திட்டங்கள் குறித்து விளக்கினார். இதில் தமிழகம் முழுவதிலுமிருந்து 75க்கும் மேற்பட்ட   இளைஞர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆபிரகாம் வரவேற்றார். எலச்சிப்பாளையம் ஒன்றிய பொறுப்பாளர் தீபக்குமார் நன்றி கூறினார்.

Tags :
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்