×

கடத்தூர் அருகே சமூக விரோத கூடாரமாக மாறிய இ-சேவை மையம்

கடத்தூர், மே 21: கடத்தூர் அருகே, பூட்டி கிடக்கும் இ-சேவை மையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடத்தூர் அருகே, புதுப்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 3 ஆண்டுக்கு முன், ₹13 லட்சம் மதிப்பில்  இ-சேவை மையம் கட்டப்பட்டது. முதல் பட்டதாரி சான்று, பட்டா மாற்றம், குடும்ப அட்டையில் பெயர் மாற்றம், சிறு விவசாயி சான்றிதழ், சிட்டா அடங்கல் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் இந்த மையத்தில் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கட்டி முடித்து 3 ஆண்டுகளை கடந்தும், இதுநாள் வரை பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல், மூடியே கிடக்கிறது. இதனால், அப்பகுதியில் உள்ள சிலர் மது அருந்துதல், சூதாடுதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பூட்டி கிடக்கும் இ-சேவை மையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kadathur ,
× RELATED கலை நிகழ்ச்சிகள் மூலம் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு