×

மறுவாக்கு பதிவு மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைப்பு

தர்மபுரி, மே 21: தர்மபுரி மாவட்டத்தில், மறுவாக்குபதிவு நடந்த 8 வாக்குசாவடிகளின் மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. தர்மபுரி நாடாளுமன்றத்திற்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத்தில் உள்ள டி.அய்யம்பட்டி, ஜாலிபுதூர், நத்தமேடு உள்ளிட்ட 8 வாக்குசாவடிகளில், நேற்று முன்தினம் மறு வாக்குப்பதிவு நடந்தது. மொத்தமுள்ள 6059 வாக்காளர்களில் 2722 ஆண்களும், 2711 பெண்களுமாக 5433 பேர் வாக்களித்தனர். காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குபதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக செட்டிக்கரை பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கலெக்டர் மலர்விழி, பொது தேர்தல் பார்வையாளர் தேபேந்திரகுமார் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், பாதுகாப்பாக அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. வரும் 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா