×

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏர்கன் துப்பாக்கியால் நாயை சுட்ட விவசாயி

பாப்பிரெட்டிபட்டி, மே 21: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, நாயை ஏர்கன் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிய விவசாயியை போலீசார் தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கொக்கராப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆசைத்தம்பி(38).  இவர் 2 நாய்களை வளர்த்து வருகிறார். பக்கத்து வீட்டை சேர்ந்த பெருமாள்(28) என்பவரும் நாயை வளர்த்து வருகிறார். நேற்று காலை இருவர் வளர்க்கும் நாய்களும் சண்டையிட்டுக் கொண்டன. இதை கண்டு ஆத்திரமடைந்த ஆசைத்தம்பி, தன்னிடம் இருந்த ஏர்கன் துப்பாக்கியால், பெருமாள் வளர்த்து வரும் நாயை நோக்கி சுட்டார். இதில் நாய்க்கு காலில் காயம் ஏற்பட்டது. இதை கண்ட பெருமாள், அடிபட்ட நாயை கோபிநாதம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றார். அங்கு நாய்க்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இது குறித்து பெருமாள் புகாரின் பேரில், கோபிநாதம்பட்டி கூட்ரோடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், நாயை சுடுவதற்கு பயன்படுத்திய ஏர்கன் துப்பாக்கியை பறிமுதல் செய்து, தப்பியோடிய ஆசைத்தம்பியை தேடி வருகின்றனர்.


Tags : Peppertipatti ,
× RELATED பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற...