தா.பேட்டை, மே 21: திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தண்டலைப்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் தரமற்று இருப்பதாகவும் திருச்சி கலெக்டர் உரிய அதிகாரிகள் கொண்டு ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முசிறி அருகே உள்ள தண்டலைப்புத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டிதர வேண்டுமென இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு அரசால் நிதி ஒதுக்கீடு ய்யப்பட்டது. 2016-2017ம் நிதியாண்டில் தண்டலைப்புத்தூர் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மேற்கு மற்றும் வடக்கு பகுதிக்கு சுற்றுசுவர் ரூ.16.43லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்ட சுற்றுச்சுவர் போதிய பலமின்றி வலுவிழந்த நிலையில் காணப்படுகிறது. கையால் குத்தினால் சுவர் இடிந்து விழுந்து விடும் நிலையில் உள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் துரைராஜ் என்பவர் கூறும்போது, பள்ளி மற்றும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி கட்டப்பட்ட சுற்றுச்சுவர் தற்போது மாணவ, மாணவிகளின் உயிருக்கு உலை வைக்கும் சுவராக மாறியுள்ளது. தரமற்ற பொருட்களாலும் சிமெண்ட் மணல் போன்ற கட்டுமான பொருட்களின் கலவை முறையாக பயன்படுத்தி பள்ளியின் சுற்றுசுவரை கட்டாததால் சுற்றுசுவர் பல இடங்களில் உடைந்துள்ளது.