திருச்சி, மே 21: 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு கடிதம் அனுப்பு போராட்டம் திருச்சியில் நடந்தது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யும் அரசின் பரிந்துரையை நிறைவேற்றிட உத்தரவிடக்கோரி திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆளுநருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. அதன்படி திருச்சி தலைமை தபால்நிலையத்தில் மாவட்ட செயலாளர் லெனின் தலைமையில் 25 நிர்வாகிகள் தபால் அட்டை ஆளுநர் முகவரிக்கு அனுப்பினர்.