×

7 பேரை விடுதலை செய்யக்கோரி ஆளுநருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

திருச்சி, மே 21: 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு கடிதம் அனுப்பு போராட்டம் திருச்சியில் நடந்தது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யும் அரசின் பரிந்துரையை நிறைவேற்றிட உத்தரவிடக்கோரி திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆளுநருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. அதன்படி திருச்சி தலைமை தபால்நிலையத்தில் மாவட்ட செயலாளர் லெனின் தலைமையில் 25 நிர்வாகிகள் தபால் அட்டை ஆளுநர் முகவரிக்கு அனுப்பினர்.

அந்த தபாலில் இந்திய அரசியலமைப்புச்சட்டம் 161வது பிரிவின்படி ஆளுநருக்கு அளித்துள்ள அதிகாரத்தின் அடிப்படையில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிடும்படி கேட்டுக்கொள்கிறோம் என எழுதியிருந்தனர். இதில் மாவட்ட பொருளாளர் சுரேஷ், மாநிலகுழு உறுப்பினர் வினோதினி, மாவட்ட துணைத்தலைவர் சீனிவாசன், நிர்வாகிகள் ரெட்டமலை, விக்கி, அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Governor ,release ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...