நகராட்சி அலட்சியம் சொந்த செலவில் சாலை அமைத்த பொதுமக்கள்

மணப்பாறை, மே 21:  மணப்பாறை நகராட்சி நிர்வாகத்திடம் சாலை வசதி ஏற்படுத்தித்தர கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாததால் நகராட்சியை  எதிர்பார்க்காமல் சொந்த செலவில் பொதுமக்கள் சாலை அைமத்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி மூன்றாவது வார்டுக்கு உட்பட்டது சங்கம ரெட்டியபட்டி. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால் தங்கள் பகுதிக்கு நகராட்சி நிர்வாகம் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பல ஆண்டுகளாக மணப்பாறை நகராட்சி நிர்வாகத்திடம், இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நகராட்சி நிர்வாகத்தை எதிர்ப்பார்க்காமல் நேற்று இப்பகுதி மக்கள் தங்களின் சொந்த செலவில் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: