×

நுண்ணீர் பாசனம் அமைக்க மானியம் விவசாயிகள் பயன்பெற அழைப்பு

திருச்சி, மே 21: முசிறி வட்டார விவசாயிகள் மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை தேர்வு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு எக்டேருக்கு 100 சதவீதம் அரசு மானியம், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படும். தற்போது நிலத்தடி நீர் குறைந்து வருவதால் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு அமைத்துள்ள விவசாயிகள் குறைந்தளவு தண்ணீரை கொண்டு சாகுபடி பரப்பை அதிகரித்து நுண்ணீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம். ஆதார்கார்டு நகல், ரேஷன் கார்டு நகல், கம்ப்யூட்டர் சிட்டா, நில வரைபடம், சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்று மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து முசிறி வேளாண் விரிவாக்க மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் அதிகபட்சமாக ஒரு குடும்பத்தினர் 5 எக்டேர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்து பயனடையலாம். முசிறி வட்டத்தில் உள்ள திட்டத்துக்கு ஏற்புடைய விவசாயிகள் இதில் பயன்பெறலாம் என முசிறி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags : Subsidy farmers ,
× RELATED விலை சரிவு; மானியம் நிறுத்தம் பட்டுக்கூடு தொழிலை கைவிட்ட விவசாயிகள்