×

முத்துப்பேட்டை இடும்பாவனம் சத்குணநாத கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

முத்துப்பேட்டை, மே 21: முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் சத்குணநாத கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சத்குணநாத கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 9ம் தேதி முதல் துவங்கியது. பக்தர்கள் உபயதாரர்கள் உதவியால் தினமும் ஓவ்வொரு மண்டகப்படிதாரர்கள் உபயத்துடன் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிலையில் முக்கிய நாளான கடந்த 17ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குன்னியூர் பண்ணை மண்டகப்படிதாரர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் காலை முதல் இரவு வரை நடைபெற்றது. பின்னர் இரவு கோயிலில் சிவாச்சாரியார்களால் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் செயல் அலுவலர் முருகையன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்

Tags : Thirukkalaiya Utsavam ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...