×

தி.பூண்டி பாமணி பள்ளிவாசல் தெருவில் தாழ்வாக செல்லும் மின் கம்பியால் விபத்துகள் ஏற்படும் அபாயம்

திருத்துறைப்பூண்டி, மே 21: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய நகர பகுதியில் கஜா புயலில் சாய்ந்து முறிந்த மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பல இடங்களில் பழைய மின் கம்பங்கள் முழுவதும் சாயாமல் சாய்ந்துள்ளது. இதுபோன்று திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாமணி பள்ளிவாசல் தெரு அருகில் இஸ்மாயில் என்பவர் வீட்டு அருகில் இரும்பினால் ஆனா மின் கம்பம் கஜா புயலில் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் அதன் வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே சாய்ந்த மின்கம்பத்தை சீர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மின்சார வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : D. Pundi Pamani ,street ,accident ,
× RELATED சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்