அம்மாப்பேட்டை வேளாண் விரிவாக்க மையங்களில் அதிகாரிகள் ஆய்வுபாபநாசம்,

மே 21: வேளாண்மைத்துறையின் கீழ் இயங்கும் விரிவாக்க மையங்களில் ஆண்டுக்கு ஒருமுறை பொருளாய்வு நடத்தப்படுகிறது. பாபநாசம் அருகே அம்மாப்பேட்டை வட்டார விரிவாக்க மையங்களில் பொருளாய்வை பேராவூரணி வேளாண் உதவி இயக்குநர் மாலதி மேற்கொண்டார். இதன்படி ஒவ்வொரு விரிவாக்க மையத்திலும் இருப்பில் உள்ள விதை ரகங்கள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள், இதர இடுபொருட்கள், கிடங்கு சரக்குகள் சரியாக உள்ளதா, மிகவும் பழுதடைந்த கிடங்கு சரக்குகளை தள்ளுபடி செய்யும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Related Stories: