படைவெட்டி மாரியம்மன் கோயிலில் சித்திரை உற்சவ விழா

கும்பகோணம், மே 21: கும்பகோணம் படைவெட்டி மாரியம்மன் கோயிலில் சித்திரை உற்சவ விழா நடந்தது. கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள படைவெட்டி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 19ம் தேதி இரவு அம்மனுக்கு பூச்சொரிதலுடன் விழா துவங்கியது. நேற்று (20ம் தேதி) இரவு கவரை தெருவில் அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. 24ம் தேதி நாகேஸ்வரன் கோயிலில் இருந்து சுவாமி வீதியுலா நடக்கிறது. 25ம் தேதி மகா நெய்வேத்தியம், தீபாரதனை நடக்கிறது.

26ம் தேதி அம்மன் படிச்சட்டத்தில் வீதியுலா நடக்கிறது.

Related Stories: