மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

தஞ்சை, மே 21: தஞ்சை கீழவாசல் எஸ்என்எம் நகர் மொய்தீன் அப்துல் காதர் ஜெய்லானி பள்ளிவாசலில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநகர கிளை சார்பில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநகர தலைவர் அப்துல் நசீர், மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் ஞானமாணிக்கம் தலைமை வகித்தனர். பள்ளிவாசல் தலைவர் இஸ்மாயில் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் காதர் உசேன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் நீலமேகம், மாநகர செயலாளர் குருசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் சரவணன், மாநகர குழு வடிவேல், அருட்தந்தையர்கள் சூசைபால், டாக்டர்.ரவி, ஜெயபால், வணிகர் சங்க பேரவை மாநில துணை பொது செயலாளர் சீனிவாசன் மற்றும் பலர் பங்கேற்றனர். சாகுல் அமீது நன்றி கூறினார்.

Related Stories: