×

சின்னகுளத்துப்பாளையம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

கரூர், மே 21: சின்ன குளத்து பாளையம் பகுதியில் கழிவுநீரை அகற்றவழிசெய்யாததால் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கிறது. இதனால் சுகாதாரசீர் கேடு ஏற்படுகிறது. கரூர் சின்னகுளத்துப்பாளையம் பகுதியில் கழிவுநீர் அகற்றபோதுமான வழிவகை செய்யப்படவில்லை. இப்பகுதியில் குடியிருப்புகளும், அடுக்குமாடி கட்டடங்களும் பெருகிவந்தாலும்வடிகால் வசதி அதற்கேற்ப செய்யப்படவில்லை. இதனால் கழிவுநீர் போக்கிடம் இன்றி குடியிருப்புபகுதியில் உள்ள காலியிடங்களில் சூழ்ந்துநிற்கிறது. இதனால் இப்பகுதியில் குடியிருப்போர் துர்நாற்றம், ஏற்பட்டு சுகாதாரகேட்டில் சிக்கி தவிக்கின்றனர். வீடுகளைபல லட்சத்திற்குவாங்கியும், பல ஆயிரம் வாடகை கொடுத்தும் சுகாதாரகேட்டை அனுபவித்துவருவதாக தெரிவித்தனர். போதுமான வடிகால்வசதியை செய்து குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள்எதிர்பார்க்கின்றனர்.


Tags : area ,Chinnakaluppalayam ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...