×

வேலாயுதம்பாளையத்தில் சேதமடைந்த ரவுண்டானாவை சீரமைக்க வலியுறுத்தல்

கரூர், மே 21: கரூர் வேலாயுதம்பாளையம் ரவுண்டானாவில் உடைந்த பாகங்களை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் மையப்பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த பகுதியில் இருந்து வேலூர், கரூர், நொய்யல், புகளூர் ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கான நான்கு வழிச்சாலை போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கனரக வாகனம் ஒன்று மோதி, ரவுண்டானா சுவர் உடைந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது எனக் கூறப்படுகிறது. எனவே, சில பகுதிகளில் உடைந்த நிலையில் உள்ள ரவுண்டானாவை சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : roundout ,Velayuthunthalayam ,
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா