சன்டே மார்க்கெட் வியாபாரி தற்கொலை

புதுச்சேரி, மே 21: முத்தியால்பேட்டை, சின்னையாபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம் என்ற மாணிக்கம் (50). சன்டே மார்க்கெட்டில் துணி வியாபாரம் செய்தார். இவருக்கு பச்சையம்மாள் என்ற மனைவியும், 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். பச்சையம்மாள், ஜிப்மரில் தனியார் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார். உடல்நிலை பாதிக்கப்பட்–்ட பரமசிவம் ஓராண்டுக்கு மேலாக வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படவே விரக்தியுடன் காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார்.

Related Stories: