×

விதிகளை மீறிய 213 பேர் மீது வழக்கு

உளுந்தூர்பேட்டை, மே 21: உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பாலசந்தர் உத்தரவின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜமன்னார், செல்வராஜ், நந்தகோபால் உள்ளிட்ட போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தேசிய நெடுஞ்சாலை, டோல்கேட், சேலம் ரோடு ரவுண்டானா, ஆசனூர், எலவனாசூர்கோட்டை, திருநாவலூர் உள்ளிட்ட பகுதியில் குடிபோதையில் இருசக்கர வாகனங்களை ஓட்டிய 6 பேர் மீதும், செல்போனில் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டிச் சென்ற 23 பேர் மீதும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற 87 பேர் மீதும், அதிகவேகம் மற்றும் சீட்பெல்ட் அணியாமல் வாகனங்களை ஓட்டிச் சென்ற 65 பேர் உள்ளிட்ட 213 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 7 பேரின் லைசென்ஸ்  பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : violators ,
× RELATED விதிகளை மீறிய 1,845 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து